
சென்னை: ஆளுநர் மாளிகை, ஐடி நிறுவனங்கள் உட்பட சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்றம், விமானநிலையம், ஆளுநர் மாளிகை, அரசியல் கட்சித் தலைவர்கள் வீடு, திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று ராயப்பேட்டை ஜிபி சாலையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1KRNOb8
0 Comments