
வேலூரில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஐஏஎஸ் தேர்வுக்காகவும் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.80 லட்சம் வரை ஏமாற்றிய இளம்பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் குணாதேவி என்ற கிளாடிஸ் குணா (24). இவர், கடந்த 2018 முதல் 2021 வரை வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்தார். அதே துறையில் காட்பாடியைச் சேர்ந்த ரூபேஷ் சதீஷ்குமார் (42) என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இருவருக்கும் இடையில் பழக்கம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rHWDKGq
0 Comments