
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணி லாயர்ஸ் ரோட்டைச் சேர்ந்தவர் அஜீஸ் (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (23). இவர் அஜீஸின் உறவினர். இவர்களது நண்பர்கள் சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ரிஷி (25), தீபக் (25) மற்றும் ஆவடியைச் சேர்ந்த மோகன் (25). 5 பேரும் தனியார் வங்கியில் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக 5 பேரும் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா செல்ல இன்று (அக்.2) அதிகாலை காரில் புறப்பட்டுள்ளனர். காரை அஜீஸ் ஓட்டியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FabrUTO
0 Comments