
கோவை: கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஷானு(47) என்பவர் வீரராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது அறையில் ஷானு திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சூலூர் போலீஸார் ஷானுவின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ycI7TbZ
0 Comments