
சென்னை: தீபாவளி கொண்டாட பணம் தேவைப்பட்டதால், மூதாட்டி ஒருவரின் வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சூளை, ராகவா தெருவில் உள்ள வீடு ஒன்றின் முதல் தளத்தில் மகனுடன் வசித்து வருபவர் தேவகி (80). மூதாட்டியான இவர், கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாநகராட்சியில் இருந்து வருவதாக கூறி அறிமுகப்படுத்திக் கொண்டு, தற்போது சென்னையில் பல இடங்களில் கொசுத் தொல்லை அதிக அளவில் உள்ளது. எனவே, மருந்தடிக்க வேண்டும். அதற்காக இடம் பார்க்க வந்தேன் என தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W5tk2oG
0 Comments