
திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அருகே 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்டார் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தெள்ளூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (40). இவர் சென்னையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி (38), மகள் கயல்விழி (9), மகன் நிதர்ஷன் (7).
கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி பிரிந்து விட்டனர். கிருஷ்ணன், மகள் கயல்விழியுடன் சென்னை குரோம்பேட்டையிலும், பூங்கொடி மகன் நிதர்ஷனுடன் ஆகாரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிலும் வசித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IxlbuaV
0 Comments