
சென்னை: மத்திய அரசு அதிகாரி தனது மகனை கொலை செய்துவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறுபட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவர் நவீன் கண்ணன் (43).
இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்புக்கணக்குகள் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணி செய்து வந்தார். தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணி செய்யும் மனைவி நிவேதிதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jZsqfSv
0 Comments