
சென்னை: பாதி விலையில் தங்கம் தருவதாக கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ரூ.60 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை முகப்பேரை தலைமையிடமாகக் கொண்டு ஏஆர்டி ஜுவல்லர்ஸ் மற்றும் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் பாதி விலையில் தங்கம் தருவதாகவும், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் வாரம் 3 சதவீதம் வட்டி உட்பட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை விளம்பரப்படுத்தியது.
இதை நம்பி ஏராளமானோர் இந்த திட்டத்தில் சேர்ந்தனர். மேலும், இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை நிறுவி கோடிக்கணக்கில் முதலீடுகளைக் குவித்தது. ஆனால், உறுதியளித்தபடி நடந்துகொள்ளாமல் ரூ.60 கோடிவரை மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pAWt1d9
0 Comments