
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, 2 மாதத்துக்கு முன்பு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றுக்கு மருத்துவமனை மூலம் அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பந்தப்பட்ட சிறுமியிடம் காவல் ஆய்வாளர் அகிலாண்டேஸ்வரி விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சிறுமிக்கு 13 வயது இருக்கும்போது அவரது தாயார் இறந்துவிட்டார். தந்தையும் குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால், கவனிக்க யாரும் இல்லாததால், பள்ளிப் படிப்பை 8-ம் வகுப்புடன் நிறுத்தி உள்ளார். இந்த சூழலில், சிறுமிக்கு அறிமுகமான 45 வயது பெண்மணி, தஞ்சாவூரில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z5UKCXw
0 Comments