
மயிலாடுதுறை: செல்போன் செயலி மூலம் கல்லூரி மாணவியின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தவர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள இன்டர்நெட் மையத்தில் பணியாற்றி வருபவர் பெரம்பூர் அகரவல்லம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்ரித்(28). அண்மையில், இந்த மையத்துக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக வந்த கல்லூரி மாணவி ஒருவரின் செல்போனில், அவருக்கே தெரியாமல் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்துவிட்டார்.
தனது செல்போனில் சந்தேகத்துக்கிடமான வகையில் நோட்டிபிகேஷன் வருவது, விரைவாக சார்ஜ் குறைவது உள்ளிட்ட காரணங்களால் சந்தேகமடைந்த அந்த மாணவி, இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lYX1fhw
0 Comments