Crime

மயிலாடுதுறை: செல்​போன் செயலி மூலம் கல்​லூரி மாண​வி​யின் நடவடிக்​கைகளை ரகசி​ய​மாக கண்​காணித்​தவர் கைது செய்யப்​பட்​டார். மயி​லாடு​துறை பழைய பேருந்து நிலை​யம் அரு​கே​யுள்ள இன்​டர்​நெட் மையத்​தில் பணி​யாற்றி வருபவர் பெரம்​பூர் அகர​வல்​லம் பகு​தி​யைச் சேர்ந்த முகமது அப்​ரித்​(28). அண்​மை​யில், இந்த மையத்​துக்கு பாஸ்​போர்ட் விண்​ணப்​பிப்​ப​தற்​காக வந்த கல்​லூரி மாணவி ஒரு​வரின் செல்​போனில், அவருக்கே தெரி​யாமல் ஒரு செயலியை பதி​விறக்​கம் செய்து கொடுத்​து​விட்​டார்.

தனது செல்​போனில் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் நோட்​டிபிகேஷன் வரு​வது, விரை​வாக சார்ஜ் குறைவது உள்​ளிட்ட காரணங்​களால் சந்​தேகமடைந்த அந்த மாண​வி, இதுகுறித்து தனது குடும்​பத்​தினரிடம் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, மயி​லாடு​துறை காவல் நிலை​யத்​தில் மாண​வி​யின் தாயார் அளித்த புகாரின்​பேரில், காவல் உதவி ஆய்​வாளர் அருண்​கு​மார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lYX1fhw

Post a Comment

0 Comments