
சென்னை: சென்னை விமான நிலையத்தில் போலி நகைகளை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு செய்ததாக சுங்கத் துறை அதிகாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்பட 13 பேர் மீது சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு முனையத்தில் மத்திய அரசின் வரிச்சலுகை பயன்படுத்துவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக சுங்கத் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7lmobhn
0 Comments