
திருச்சி: ராமஜெயம் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட 2 ரவுடிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர். இதில், சந்தேகத்தின் அடிப்படையில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி ஜே.எம்-6 நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/T36wIMs
0 Comments