
தஞ்சாவூர்: தஞ்சாவூர் கல்லணையில் குதித்து 2 குழந்தைகள், 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், குடும்பப் பிரச்சினையில் விபரீத முடிவு எடுத்துள்ளனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணைக் கால்வாயில் உள்ள 20 கண் பாலத்தில் இருந்து 5 வயது சிறுவன் மற்றும் கைக்குழந்தை யுடன் 2 பெண்கள் நேற்று முன்தினம் ஆற்றில் குதித்தனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆற்றில் குதித்து, அவர்களை மீட்க முயற்சித்தனர். இதில், கைக்குழந்தை தவிர மற்ற 3 பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, கைக்குழந்தையைத் தேடும் பணி நடைபெற்றது. இதில், துறையுண்டார்கோட்டை பகுதியில் குழந்தையின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bWXtJ1R
0 Comments