
சென்னை: சைபர் க்ரைம் மோசடி கும்பலுக்கு உதவிய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம் (29). இவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சைபர் மோசடி கும்பல் இவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.17 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளது. சல்மான் சலீம் இதுதொடர்பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அனுப்பிய பணம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த புஷ்பா (35) மற்றும் அவரது கணவர் சதுரகிரி (41) ஆகியோரின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றது தெரியவந்தது. அந்த பணத்தை அவர்கள் காசோலை மூலம் எடுத்திருந்ததும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HznoApy
0 Comments