Crime

சென்னை: சைபர் க்ரைம் மோசடி கும்​பலுக்கு உதவிய கணவன், மனைவி கைது செய்​யப்​பட்​டனர். அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் சல்​மான் சலீம் (29). இவர் நிறு​வனம் ஒன்றை நடத்தி வரு​கிறார். சைபர் மோசடி கும்​பல் இவரிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.17 லட்​சம் பெற்று மோசடி செய்​துள்​ளது. சல்​மான் சலீம் இதுதொடர்​பாக சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டதில், அவர் அனுப்​பிய பணம் விருதுநகர் மாவட்​டம், சிவ​காசி லட்​சுமிபுரத்​தைச் சேர்ந்த புஷ்பா (35) மற்​றும் அவரது கணவர் சதுரகிரி (41) ஆகியோரின் வங்​கிக் கணக்​கு​களுக்கு சென்​றது தெரிய​வந்​தது. அந்த பணத்தை அவர்​கள் காசோலை மூலம் எடுத்​திருந்​ததும் தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HznoApy

Post a Comment

0 Comments