
சென்னை: நிச்சயதார்த்தம் செய்துவிட்டு காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், விரக்தியில் 7-வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா(25). மாற்றுத் திறனாளியான இவர் பிபிஏ படித்து முடித்து வீட்டில் இருந்துவந்தார். சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன்(26).
ஹர்ஷிதாவும், தர்ஷனும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இருவருக்கும் விமரிசையாகநிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்புதிடீரென ஹர்ஷிதாவிடம், ‘உன்னை திருமணம் செய்ய விருப்பம் இல்லை, திருமணத்தை நிறுத்திவிடலாம்’ என தர்ஷன் கூறியதாகத்தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tN39QTs
0 Comments