
சென்னை: தொழில் அதிபரை மயக்கி நகைகளைத் திருடிய இளம்பெண் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் மணி. தொழில் அதிபரான இவர் குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த மாதம் 27-ம் தேதி, பெண் தோழி ஒருவருடன் தேனாம்பேட்டையில் உள்ள ஓர் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, அந்த பெண்ணையும் காணவில்லை. அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியையும் காணவில்லை.
அதிகளவு மது ஊற்றிக் கொடுத்து மயங்க வைத்து, தங்கச் சங்கிலியை அந்தப் பெண் திருடிச் சென்றது அவருக்குத் தெரியவந்தது. இதுகுறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மணி புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mch6d0O
0 Comments