Crime

சென்னை: குழந்தை கீழே கிடந்ததாக போலீஸில் ஒப்படைத்து நாடகமாடிய இளைஞரும், மாணவியும் அக்குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ஓமந்தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்கு கையில் கட்​டைப்​பை​யுடன் இளைஞர் ஒரு​வர் கடந்த சனிக்​கிழமை வந்​தார்.

அவர் கட்​டைப்​பையை அங்கு பாது​காப்​புப் பணி​யில் இருந்த போலீ​ஸாரிடம் கொடுத்​து, ``நான் சாலை​யில் நடந்து சென்று கொண்​டிருந்​தேன். அப்​போது, சாலை​யோரம் கட்​டைப்​பை​யில் வைத்​த​வாறு இந்த குழந்தை கீழே கிடந்​தது'' எனத் தெரி​வித்​தார். இதையடுத்து போலீ​ஸார், அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்​தில் கிடந்​தது? எப்​போது பார்த்​தீர்​கள்? எனக் கேள்வி​களை எழுப்ப, இளைஞர் முன்​னுக்​குப் பின் முரணான பதிலளித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0zhMIZG

Post a Comment

0 Comments