
சென்னை: ரூ.120 கோடி வங்கி மோசடி வழக்கில் தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை மேற்கொண்டது. காஞ்சிபுரத்தை தலைமையகமாகக் கொண்ட பத்மாதேவி சர்க்கரை ஆலை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள், அரசு ஊழியர்களுடன் கூட்டு சேர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.120.84 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக தென்காசி, சென்னை மற்றும் திருச்சி உட்பட தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள், அவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hbWu4Rw
0 Comments