
மதுரை: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் அளித்த வாக்குமூலத்தில், மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா மற்றும் 3 கவுன்சிலர்கள் சொத்துவரி குறைப்பு விவகாரத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் நேற்று முன்தினம் டிஐஜி அபினவ் குமாரிடம், விசாரணை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் கண்ணன் அளித்துள்ள வாக்குமூலம் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JGcS8KY
0 Comments