
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண் கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாரணாபுரம்-அனுப்பங்குளம் சாலையில் ஸ்ரீமாரியம்மன் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம்போல் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் பேன்ஸி நவீன பட்டாசுக்கு தேவையான மணி மருந்து கொண்டு செல்லும்போது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HlMvSFo
0 Comments