
சென்னை: பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மெத்தம்பெட்டமைனை கடத்தி வந்த இளம் பெண் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார். இக்கும்பல் சினிமா துறையினரை குறிவைத்து போதைப் பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களுடன் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினரும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு கடந்த 12-ம் தேதி ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து அன்று மதியம் எம்ஜிஆர் நகர், கே.கே.சாலையிலுள்ள ஓட்டல் அருகே போலீஸார் கண்காணித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R2g9boM
0 Comments