
விழுப்புரம்: ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இணைய வேண்டும் என வலியுறுத்தி திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டின் முன்பு 6 தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
உச்சக்கட்ட மோதல் அதிகரித்துள்ள நிலையில், பாமக மாநில செயற்குழுக் கூட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ராமதாஸுக்கு பக்கபலமாக உள்ளவர்கள். தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ViNbIGQ
0 Comments