
ஊட்டி: நீலகிரி மாவட்டம் காத்தாடிமட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த செந்தில்குமார் (50), பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 3-ம் தேதி மாணவிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நலன் பாதுகாப்புக் குழும உறுப்பினர் கொடுத்த புகாரின் பேரில், ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், செந்தில்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்‌.எஸ்‌.நிஷா, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Dwp48kl
0 Comments