
நாமக்கல்: நாமக்கல் மோகனூர் சாலை கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(55). இவர் திருச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிரமிளா (51). மோகனூர் அருகேயுள்ள ஆண்டாள்புரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் சம்யுக்தா (25). மகன் ஆதித்யா (21).
இந்நிலையில், நேற்று அதிகாலை நாமக்கல் அருகே வகுரம்பட்டி என்ற இடத்தில் நாமக்கல்-கரூர் ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி பிரமிளா ஆகியோர் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த சேலம் ரயில்வே போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாக தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OiXY8Fz
0 Comments