Crime

திருச்சி: திருச்சி தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செங்கரையான்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அபிஷேக்(18).

திருச்சி புத்தூர் வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, விடுதிக் காப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஜூலை 7-ம் தேதி அபிஷேக்கின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு, அபிஷேக் சரியாக கல்லூரிக்குச் செல்வதில்லை என புகார் தெரிவித்து, கல்லூரிக்கு வருமாறு கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fZdJuTk

Post a Comment

0 Comments