
சென்னை: நீதிபதியின் மகள் என போலீ ஸாரை மிரட்டியதாக பெண் காவலர் கைது செய்யப்பட்டார். சென்னை செம்பியம் காவல் நிலையத்தை போனில் தொடர்பு கொண்டு பெண் ஒருவர் பேசினார். அவர், தான் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் எனவும், செம்பியத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டதற்கான கட்டணம் ரூ.1,500-ஐ செலுத்திவிடுமாறும் கூறியுள்ளார். உடனே அந்த காவல் நிலைய போலீஸார், பணத்தை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அந்த பெண் மீண்டும் செம்பியம் காவல் நிலைய தொலைபேசிக்கு எண்ணில் தொடர்பு கொண்டு, செம்பியத் தில்தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கட்டணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட செம்பியம் காவல் நிலைய போலீஸார், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nHIQNU0
0 Comments