
சென்னை: போதைப் பொருள் வழக்கில் மூன்றெழுத்து நடிகர்கள் இருவர், நடிகைகள், நான்கெழுத்து இசை அமைப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுகுறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வாட்ஸ்அப் குழு மூலம் போதைப்பொருள் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்ற தகவலை தனிப்படை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23-ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘தீங்கிரை’ திரைப்படத்தை தயாரித்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கம் ஏற்பட்டதாகவும், ‘கழுகு’ திரைப்பட நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாகவும், அவர் மேலும் சிலருக்கு போதைப் பொருளை கைமாற்றியதாகவும் தெரிவித்து இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LycrSx8
0 Comments