Crime

திருப்பூர்: 18 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளை முயற்சியின் போது தொழிலதிபதிரை சுட்டுக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (30). தொழிலதிபர். இவருடைய தந்தை கருப்பசாமி (60). தாயார் சிவகாமி (50). கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது, இரவு 9 மணி அளவில் அழைப்பு மணி அடித்தது. சிவக்குமார் கதவை திறந்தார். அப்போது 3 பேர் உள்ளே நுழைந்து கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி, சிவக்குமாரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இதை பார்த்த கருப்பசாமி அவர்களை தடுக்க முயன்றார். துப்பாக்கியால் சுட்டத்தில் கருப்பசாமியின் நெஞ்சில் குண்டு பாய்ந்து சரிந்து விழுந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lNhOrGp

Post a Comment

0 Comments