Crime

திண்டுக்கல்; ஒட்டன்சத்திரம் அருகே மகள் வேறு ஒருவருடன் சென்றதால், அவரின் தாய், பாட்டி ஆகியோர் இரண்டு பேத்திகளையும் கொலை செய்து விட்டு, தாங்களும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த இடையகோட்டை அருகேயுள்ள சின்ன குளிப்பட்டியைச் சேர்ந்தவர் பவித்ரா (27). இவர் கணவர் பிரபாகரனுடன் பள்ளபட்டி அருகே சவுந்தராபுரத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், தொடர்ந்து பவித்ரா தன் தாய் வீட்டுக்கு வந்துவிடுவதும் வாடிக்கையாக இருந்துவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Enb1jqz

Post a Comment

0 Comments