Crime

சேலம்: ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னங்களைப் போலியாக பயன்படுத்தியும், வங்கி அதிகாரிகள் போல் நாடகமாடியும் இரிடியம், காப்பர் விற்பனையில் முதலீடு செய்தால் அதிகமான வட்டி கிடைக்கும் என ஏமாற்றியும் ரூ.45 கோடி வரை மோசடி செய்த வழக்கில் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்​திய ரிசர்வ் வங்​கி​யின் பெயர் மற்​றும் சின்​னங்​களைப் பயன்​படுத்தி போலி ஆவணங்​களைத் தயார் செய்து பொது​மக்​களிடம் பண மோசடி​யில் சிலர் ஈடு​பட்டு வரு​வ​தாக ரிசர்வ் வங்கி இணை​யதளத்​தில் பொது​மக்​கள் புகார் அளித்​தனர். இதுகுறித்து ரிசர்வ் வங்​கி​யின் உதவி பொது​மேலா​ளர் கென்​னடி, சென்னை வேப்பேரி காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் புகார் அளித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TzYyM64

Post a Comment

0 Comments