
சென்னை: சென்னை பரங்கிமலையில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, புதுச்சேரி விரைவு ரயில் மோதியதில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் ராயல் நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஜக் மகன் முகமது நவ்ஃபால் (21). இவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் மகன் சபீர் அகமது (20). இவர்கள் இருவரும் மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கணினி அறிவியல் இறுதியாண்டு படித்து வந்தனர். இருவரும் பரங்கிமலையில் டி.என்.ஜி.ஒ. காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fI7plrk
0 Comments