Crime

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீசன், கீதா ஆகியோர் வெட்டுக்காயங்களுடன் கிடந்தனர். அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Djz0Hu3

Post a Comment

0 Comments