
சென்னை: துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட முன் விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தரமணி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடப்பதாக தரமணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸாரின் தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டது தரமணியைச் சேர்ந்த அஸ்வின்(25) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையை முன்னெடுத்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 இளைஞர்கள், தரமணி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ib8EHZ2
0 Comments