
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் கடத்தப்பட்ட 600 கிலோ ஐஸ் போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து அந்நாட்டைச் சேர்ந்த 11 பேரை கைது செய்துள்ளனர். செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சர்வதேச கடற்பகுதியில் போதைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றிய தேடுதல் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு: இந்நிலையில், நேற்று முன்தினம் (புதன்) இலங்கையின் தெற்கு பகுதியிலுள்ள திக்கோவிட்டவில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் சந்தேகத்துக்குரிய முறையில் பயணித்த 2 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கண்டறிந்து ரோந்து கப்பலில் சென்று சுற்றி வளைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I2EoOv8
0 Comments