Crime

சென்னை: ஜவுளிக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 31 பவுன் தங்கம், 4 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து தப்பிய பெண் உட்பட 3 பேர் கும்பலை எம்.கே.பி. நகர் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 3-வது லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெற்றோருடன் வசிப்பவர் ஹித்தேஷ்(26). இவர் எம்.கே.பி. நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவரது பெற்றோர் அண்மையில் பெங்களூரு சென்றுவிட்டனர். இதனால், ஹித்தேஷ் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ne9B2rt

Post a Comment

0 Comments