Crime

திருவாரூர்: பெங்களூரு போலீஸார் திருவாரூர் நகைக் கடைகளில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தி, ஒரு கிலோ தங்க நகைகளை மீட்டதுடன், 2 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் 1.360 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, அம்மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் பெங்களூரு போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை திருவாரூர் பாத்திமா காலனி பகுதியைச் சேர்ந்த தினகரன்(42), ஆறுமுகம்(45) ஆகியோர் மூலமாக, திருவாரூரில் உள்ள 3 நகைக் கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rGxRW8v

Post a Comment

0 Comments