
சென்னை: 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பாம் சரவணன் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூர், அமுதம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (51). மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2018 ஏப்ரல் 14-ம் தேதி கொடுங்கையூர் டி..எச்.ரோடு, சின்னாண்டி மடம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 பேர் கத்தி முனையில் நடராஜனிடம் வழிப்பறி செய்து தப்பினர்.
இந்த விவகாரம் குறித்து கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது கொலை, திருட்டு, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து உட்பட சுமார் 37 குற்ற வழக்குகளில் தொடர்புடைய புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாம் சரவணன், அவரது கூட்டாளி ஓட்டேரி திருவிக நகரைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4LO9K5g
0 Comments