Crime

என்கவுன்ட்டர் செய்து விடுவதாக மிரட்டிய ஓய்வுபெற்ற போலீஸ் உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரது மனைவியை சந்தித்த அப்போதைய போலீஸ் உதவி ஆணையர் இளங்கோவன், இனி உன் கணவர் கையில் கத்தியை எடுத்தால் என்கவுன்ட்டர் செய்து விடுவதாக மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கும், காவல் ஆணையருக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JHcMDYj

Post a Comment

0 Comments