Crime

பொள்ளாச்சி: சென்னையில் இருந்து ஆழியாறுக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் 3 பேர், ஆற்றில் இறங்கி குளித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 3 பேரின் சடலமும், பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் படிக்கும் 14 மாணவர்கள் மற்றும் 14 மாணவிகள், அக்கல்லூரியின் கிளினிக்கல் தெரபிஸ்ட் சந்தோஷ் (23) என்பவர் தலைமையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரயில் மூலம் கோவை வந்துள்ளனர். கல்லூரியில் இரவு தங்கியிருந்து விட்டு, இன்று காலை 6.30 மணிக்கு இரண்டு சுற்றுலா வேன்கள் மூலம் ஆழியாறு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9TZCHXy

Post a Comment

0 Comments