Crime

விருத்தாசலம்: விருத்தாசலம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில், பெண்ணின் தந்தை, சகோதரர், வழக்கை நடத்திய ஆய்வாளர் உட்பட 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். பட்டியலினத்தை சேர்ந்த இவரும், அருகில் உள்ள புதுகூரைப்பேட்டையை சேர்ந்த மாற்றுச் சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவரும் காதலித்து வந்தனர். கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, இவர்கள் இருவரும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், புதுமண தம்பதியர் இருவரும் 2003 ஜூலை 17-ம் தேதி காதில் விஷம் ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். விருத்தாசலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ehxRBub

Post a Comment

0 Comments