Crime

புதுச்சேரி: பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் இன்று (ஏப்.28) கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முதலாவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள கருணாவை 4 தனிப்படை போலீஸார் தேடி வருவதாக எஸ்எஸ்பி கலைவாணன் தெரிவித்தார். மேலும், மதுபானக்கடை விவகாரத்தில் கொலை நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுவை கருவடிகுப்பம் சாமி பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரின் மகன் உமாசங்கர் (38). பாஜகவின் இளைஞரணியில் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர். இவர் லாட்டரி அதிபர் மாட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் பிறந்தநாளை கருவடிகுப்பத்தில்கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். விழா ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு திருமண மண்டபத்திலிருந்து வெளியே வந்த உமாசங்கரை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SNJhKxv

Post a Comment

0 Comments