
சென்னை: டிஜிட்டல் கைது முறையில் மூதாட்டியை மிரட்டி ரூ.4.67 கோடி பணம் பறித்த வழக்கில் 15 பேரை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டி ஒருவர் பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர் தொலைத் தொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். உங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில், கோடிக் கணக்கில் சட்ட விரோத பண பரிமாற்றம் (ஹவாலா) நடைபெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rSv0GCD
0 Comments