Crime

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3-வது குற்றவாளி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் கடந்த 6-ம் தேதி இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலா பயணி, 28 வயதான சுற்றுலா வழிகாட்டி ஆகிய 2 பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஒடிசா சுற்றுலா பயணி பிபாஷ் குமாரை 3 இளைஞர்கள் தாக்கி, சனாப்பூர் கால்வாயில் தள்ளிவிட்டனர். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fg1zGW6

Post a Comment

0 Comments