
மதுரை: மதுரை அருகே ஓய்வுபெற்ற பெண் ்அரசு அலுவலரை நகைக்காக கொன்று உடலை சாக்குமூட்டையில் வீசிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை அவனியாபுரம் புறவழிச்சாலை ஈச்சனோடை பகுதியில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி வீசப்பட்டார். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு,போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்த பெண் இந்திராணி (70) என்பதும், அவரது கணவர் நடராஜன் என்பதும் தெரியவந்தது. மேலும், ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அவர், வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் வசித்து வந்ததுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2swLPpA
0 Comments