
சென்னை: கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிவந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக்கடையில் திருடியபோது சிக்கிய இவர் மீது 21 திருட்டு வழக்குகள் உள்ளன.
சென்னை ஆவடி, பருத்திப்பட்டு, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராமு (33). இவர் நேற்று முன்தினம் தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடையில் துணிகள் வாங்கினார். பின்னர், வாங்கிய உடைக்கு பணம் கொடுப்பதற்காக பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மணிபர்சை பார்த்தபோது, அதை கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரோ திருடியிருப்பது தெரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sw9T1A6
0 Comments