
சமூக வலை தளங்களில் அவதூறு வீடியோக்களை வெளியிட்ட திருச்செந்தூர் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் யானை சாலை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில், தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிய மணிகண்டன், தனது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், 234 எம்எல்ஏக்கள் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தனது தொகுதியின் வளர்ச்சிக்கும் இவர்கள் எதுவும் செய்யாததால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோவில் மணிகண்டன் தெரிவித்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HVOLxbY
0 Comments