
சென்னை: மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்து வந்த ஒடிசா இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையைத் தடுக்க காவல் ஆணையர் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, பெரியமேடு போலீஸார் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையம், இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் அருகே கண்காணித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TQ9MAn3
0 Comments