Crime

குளித்தலை அருகே போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி கீழே விழுந்ததில் காயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கருப்பத்தூரைச் சேர்ந்தவர் சங்கர் என்ற வெட்டு சங்கர்(35). ரவுடி. அதே பகுதியைச் சேர்ந்தர் நாகராஜ். இவர்களிடையே கடந்த 6-ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில், சங்கர் அரிவாளின் பின்பக்கத்தால் நாகராஜை தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் கடந்த 7-ம் தேதி பிள்ளாபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த சங்கரை கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்ப முயன்ற சங்கர், பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SgCGTZn

Post a Comment

0 Comments