
சென்னை: சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை சார்பில் வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது தொடர்பான ‘பாத்து போங்க’ விழிப்புணர்வு நடைபயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று காலை நடைபெற்றது. குடிபெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரிந்தர் பகத், சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர். அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உட்பட 400-க்கும் மேற்பட்டோர் நடைபயணத்தில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ix4Qea6
0 Comments