Crime

திருச்சி: மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியை சூறையாடிய பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் 4-ம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி நிர்வாகியும், தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார் (54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த வசந்தகுமாரைத் தாக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mCYtlai

Post a Comment

0 Comments